Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெதுவாக விளையாடியது ஏன்.. விராட் கோலி அளித்த பதில்!

மெதுவாக விளையாடியது ஏன்.. விராட் கோலி அளித்த பதில்!
, திங்கள், 6 நவம்பர் 2023 (06:53 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். கடைசி நேரத்தில் கூட அவர் அதிரடியாக விளையாடாமல் எதிர்முனை வீரர்களுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார்.

இது குறித்து போட்டி முடிந்ததும் பேசிய அவர் “நான் ஆடிக் கொண்டிருக்கும் போது எனக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து வந்த அறிவுரை பொறுமையாக விளையாட சொல்லிதான். அதனால் கடைசி வரை களத்தில் இருக்கவேண்டும் என நினைத்து ஆடினேன். ஆடுகளம் ஒரு கட்டத்துகு மேல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதும் ஆட்டத்தை மாற்றிக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. தென்னாப்பிரிக்காவின் மோசமான தோல்வி..!