Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பிக் கொடுத்த மேத்யூஸ்… ஷகீப் விக்கெட்டை எடுத்தபின் செய்த செயல்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (08:30 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.

இது இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தால் போட்டி முடிந்ததும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை வீரர்கள் போட்டி முடிந்ததும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் பேட் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்திய ஏஞ்சலோ மேத்யூஸ் தன்னுடைய கையைக் காட்டி “இது நீங்கள் வெளியேற வேண்டிய நேரம் (டைம் அவுட்)” என பதிலடி கொடுக்கும் விதமாக நடந்துகொண்டார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments