Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

vinoth
வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:13 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் இலக்கைத் துரத்த முடியவில்லை. 159 ரன்கள் மட்டுமே சேர்த்து அந்த அணி ஆட்டமிழந்தது. அந்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக ஆடிவந்த நிலையில் அவரின் சர்ச்சைக்குரிய விக்கெட் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

ரியான் பராக் ஏழாவது ஓவரில் பேட் செய்யும் போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் உடனடியாக அந்த விக்கெட்டை ரிவ்யூ செய்தார். அதையடுத்து மூன்றாம் நடுவர் அந்த விக்கெட்டை ரிவ்யூ செய்தார். அப்போது பந்து பேட்டைத் தாண்டி செல்லும் போது பேட் தரையில் பட்டது. இதனால் ஸ்னிக்கோ மீட்டரில் அந்த நேரத்தில் மாற்றம் தெரிந்தது. இதன் காரணமாக பந்து பேட்டில் பட்டதா, அல்லது பேட் தரையில் பட்டதா என்பதை உறுதி செய்யமுடியவில்லை. ஆனாலும் மூன்றாம் நடுவர் அதை அவுட் என அறிவித்தார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பராக், கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டி வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments