Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

vinoth
திங்கள், 31 மார்ச் 2025 (09:30 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182 ரன்களை குவித்த நிலையில், சேஸிங் சென்ற சிஎஸ்கே 176 ரன்களே எடுத்து வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை சென்னை அணி விரைவாக வீழ்த்திய போதும் நிதீஷ் ராணாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.

இந்த தோல்வி குறித்து போட்டிக்கு பின் பேட்டியளித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் “நிதீஷ் ராணா பவர்ப்ளேயில் ஸ்கொயர் திசைக்குப் பின்னால்தான் அடிப்பார் என்று தெரிந்தும் நாங்கள் அதனைத் தடுக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை. அவரை நேராக விளையாட வைத்திருக்க வேண்டும். மோசமான ஃபீல்டிங்கால் சில ரன்களைக் கொடுத்தோம். அதையும் தடுத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments