Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா திரும்பிய ரோஹித் ஷர்மா… பிசிசிஐ வெளியிட்ட தகவல்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (10:00 IST)
ரோஹித் ஷர்மா காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.

கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ஆனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் ஷர்மா சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற இந்தியா திரும்பியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் அவர் மருத்துவரை சந்தித்து கைக் காயத்தின் தன்மையை பொறுத்துதான் அவர் டிசம்பர் 14 ஆம் தேதி நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியும் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments