Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

vinoth
புதன், 25 டிசம்பர் 2024 (13:25 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. நாளை மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது.

இந்த தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி நான்கு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் நாளைய டெஸ்ட்டில் ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே எல் ராகுல் மூன்றாவது இடத்திலும் ஷுப்மன் கில் ஆறாவது இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கில் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments