Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

vinoth
திங்கள், 30 டிசம்பர் 2024 (11:38 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளின் முடிவில் 1-1 என்ற சமன் நிலவினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையின் உதவியால்தான் ட்ரா ஆனது.

தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ட்ரா செய்யவே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியை வெற்றியோடு ஆரம்பித்த இந்திய அணி ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சொதப்பி வருகிறது.

இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. அவர் இந்த தொடரில் இதுவரை 32 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அவர் மொத்தமாக சந்தித்ததே 100 பந்துகளுக்குள்தான். அதனால் இந்த மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இன்றைய போட்டி முடிந்ததும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments