Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்காக தனது இடத்தை விட்டுக்கொடுத்த ரோஹித் ஷர்மா!

vinoth
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (07:57 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் வண்ண பந்து கொண்டு விளையாடப்படவுள்ளது. இதுவரை இரண்டு அணிகளும் பகலிரவு போட்டிகளில் விளையாடியதில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது. 2020 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த பகலிரவு போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விக்குப் பதில் சொல்லும் விதமாக இந்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் தான் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் கூட்டணி மிகச்சிறப்பாக விளையாடி அணியை சிறப்பாக வழிநடத்தியது. அதனால் அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா களமிறங்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments