Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“இதனால்தான் டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை..” ரோஹித் ஷர்மா சொல்லும் காரணம்!

“இதனால்தான் டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை..” ரோஹித் ஷர்மா சொல்லும் காரணம்!
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (08:29 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் டி 20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறுவதில்லை. அவர்களுக்கு பதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இதனால் மூத்த வீரர்களின் டி 20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இதுபற்றி இப்போது ரோஹித் ஷர்மா வேறு விதமான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். அதில் “கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பை இருந்ததால் மூத்த வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதைக் குறைத்துக் கொண்டோம்.

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வர உள்ளதால் இப்போது டி 20 போட்டிகளில் விளையாடுவதை குறைத்துக் கொண்டுள்ளோம். ” எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் முழுவதும் நடப்பதால் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியக் கோப்பை ஹாக்கி.. இன்று அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளும் இந்தியா!