Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஒரு விஷயம்தான் என் திட்டத்தை செயல்படுத்த உதவியது… கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருத்து.

இந்த ஒரு விஷயம்தான் என் திட்டத்தை செயல்படுத்த உதவியது… கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருத்து.
, புதன், 9 ஆகஸ்ட் 2023 (12:05 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தொடர் இப்போது 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “மிக முக்கியமான வெற்றி. எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களும் பரபரப்பாக இருக்கும் என்று போட்டிக்கு முன்பாக குழுவாகப் பேசினோம். இரண்டு தோல்விகள் அல்லது இரண்டு வெற்றிகள் நீண்ட கால திட்டங்களை மாற்றாது. இது போன்ற நாக் அவுட் போட்டிகள் வரும்போது நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். நிக்கி (பூரன்) பேட்டிங் செய்ய வெளியே வரவில்லை, அது எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களைத் திரும்ப பந்துவீச அனுமதித்தது, மேலும் அக்சரை தனது நான்கு ஓவர்களை வீச அனுமதித்தது. நிக்கி அடிக்க வேண்டுமென்றால், என்னை அடிக்கட்டும் என நினைத்திருந்தேன். அதுதான் திட்டம், அப்படிப்பட்ட போட்டியை நான் ரசிக்கிறேன்.

பூரன், நான்காவது டி20 போட்டியில் என்னை கடுமையாக தாக்குவார் என்று எனக்குத் தெரியும். ஒரு குழுவாக நாங்கள் ஏழு பேட்டர்களுடன் பேட் செய்ய முடிவு செய்துள்ளோம்,  இன்று நடந்தது போல் பேட்டர்கள் ரன் எடுத்தால் உங்களுக்கு எட்டாவது இடத்தில் இருப்பவர் தேவையில்லை. சூர்யா  மற்றும் திலக் ஒன்றாக விளையாடுகிறார்கள். மற்றும் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்கள், SKY போன்ற ஒருவர் அணியில் இருப்பது நல்லது, அவர் பொறுப்பை ஏற்கும்போது அது மற்றவர்களுக்கு பணியை எளிமையாக்குகிறது.” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த அணியைக் கொடுக்க வேண்டும்… யுவ்ராஜ் சிங் ஆலோசனை!