Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீருக்கும் டிராவிட்டுக்கும் என்ன வித்தியாசம்… ரிஷப் பண்ட் பகிர்ந்த தகவல்!

கம்பீருக்கும் டிராவிட்டுக்கும் என்ன வித்தியாசம்… ரிஷப் பண்ட் பகிர்ந்த தகவல்!

vinoth

, வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:18 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகளோடு தொடரை விளையாடிய நிலையில் தற்போது ஒரு மாதத்துக்கு மேல் ஓய்வில் உள்ளது. இலங்கை தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தலைமையில் இந்திய அணி டி 20 தொடரை வென்றாலும், ஒருநாள் தொடரை இழந்தது.

இதையடுத்து இந்திய அணி விரைவில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ராகுல் டிராவிட் மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே பயிற்சியாளராக உள்ள வித்தியாசம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “வெற்றி தோல்விகளைப் பொறுத்தவரை டிராவிட் நிதானமானவர். அவர் இரண்டையும் ஒரே போல பார்ப்பார். ஆனால் கம்பீர் எப்போதும் வெற்றிகளின் பக்கம் நிற்பவர். அவருக்கு எப்போதும் வெற்றிகள்தான் வேண்டும்” எனக் கூறுவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய ரயில்வே பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத்!