Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நினைத்ததை விட நல்ல முன்னேற்றம்… பண்ட்டுக்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை- லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
புதன், 31 மே 2023 (16:25 IST)
கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து வந்த இப்போது சுயமாக நடக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ஜிம்முக்கு சென்று உடல்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதுசம்மந்தமான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதால் திட்டமிடப்பட்டு இருந்த இன்னொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை என மருத்துவர் குழு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும்  எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments