பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

vinoth
செவ்வாய், 6 மே 2025 (09:30 IST)
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரையும் வாய்பிளக்கவைத்தார். இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் செய்ததுதான் மகா சொதப்பல். இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதன் காரணமாக லக்னோ அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப் செல்ல ஏதேனும் மாயாஜாலம் நடக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் பண்ட் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் “ரிஷப் பண்ட் எப்போதும் கவலையில்லாமல் சிரித்து மகிழ்ச்சியாகக் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்.  ஆனால் இந்த சீசனில் அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. அது கேப்டன் பொறுப்பாலோ அல்லது அதிக சம்பளம் கொடுத்து வாங்கப்பட்டதாலோ வந்த அழுத்தமாக இருக்கலாம். இந்த சீசனில் அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெதர்லாந்து கூட நம்மை தோற்கடித்துவிடும்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை இழந்த பாகிஸ்தான் புலம்பல்..!

இந்த டிராமா எல்லாம் என்கிட்ட பலிக்காது: வங்கதேசம், பாகிஸ்தானுக்கு ஜெய்ஷா கொடுத்த சாட்டையடி..!

சன் ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர்.. காவ்யா மாறன் குறித்து பிசிசிஐ கூறியது என்ன?

சன் ரைசர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்த காவ்யா மாறன்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

ஐபிஎல் 2026.. முதல்கட்ட அட்டவணை வெளியீடு.. சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments