நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

vinoth
வியாழன், 24 ஜூலை 2025 (14:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 58 ரன்களும் கே எல் ராகுல் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய சாய் சுதர்சன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கேப்டன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காலில் அடிபட்டு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments