Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

Advertiesment
ரிஷப் பண்ட்

vinoth

, சனி, 18 ஜனவரி 2025 (07:02 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரிஷப் பண்ட் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். அவர் வரும் 23 ஆம் தேதி நடக்கவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார். இந்த போட்டியில் அவருக்கு டெல்லி அணியை வழிநடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்ட போதும் அவர் அதை நிராகரித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் “ஓரிரு போட்டிகள் மட்டுமே விளையாட அணிக்குள் வரும் தாம் கேப்டன் பதவியை ஏற்றால் அது அணி வீரர்களுக்கு நியாயம் சேர்க்காது” எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமாஜ்வாதி எம்பியை திருமணம் செய்கிறார் ரிங்கு சிங்: எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்..!