இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இளம் இந்திய அணி மிகச்சிறப்பாக பேட் செய்த போதும் பவுலிங் அதற்கு இணையாக இல்லாததால் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் என சொல்லப்படும் நிலையில் இந்த போட்டியிலும் வெற்றிக் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புதிய கேப்டன் ஷுப்மன் கில் குறித்துப் பேசியுள்ளார். அதில் “இங்கிலாந்து தொடரில் தோல்வி அடைந்தாலும், ஷுப்மன் கில்லுக்குத் தொடர்ந்து 3 ஆண்டுகள் கேப்டனாக வாய்ப்பளிக்க வேண்டும். அப்போது அவர் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத் தருவார்” எனக் கூறியுள்ளார்.