Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வில் தோனி இருக்கும் வரை ஆர்சிபியால் கோப்பை வெல்ல முடியாது… பாக் வீரர் கருத்து!

vinoth
சனி, 8 மார்ச் 2025 (10:44 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த ஆண்டாவது அந்த அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லதீப் ஐபிஎல் குறித்து பேசும்போது “சென்னை அணியில் தோனி இருக்கும் வரை ஆர் சி பி அணியால் கோப்பையை வெல்ல முடியாது” எனப் பேசியுள்ளார். சென்னை அணியில் தோனி இருப்பதற்கும், ஆர் சி பி அணி கோப்பையை வெல்வதற்கும் என்ன சம்மந்தம்? இவர் என்ன கிரிக்கெட் பற்றி தெரியாத ரசிகர்கள் பேசுவது போல பேசுகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த வீரர்தான் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்… நியுசிலாந்து பயிற்சியாளர் ஆருடம்!

எத்தன வயசானாலும்…? சிங்கம் சிங்கம்தான் – 55 வயதில் ஜாண்ட்டி ரோட்ஸ் அபார டைவ்!

மீண்டும் பிசிசிஐ மத்தியப் பட்டியலில் இணையும் ஸ்ரேயாஸ் ஐயர்!

அது என்னுடைய இயல்பான கொண்டாட்ட முறை… மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் -. பாகிஸ்தான் வீரர் அப்ரார்!

கோலியின் கேரியர் சிறந்த முடிவை எட்ட அது நடக்கவேண்டும் – டிவில்லியர்ஸ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments