Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“அது மட்டும் நடக்காவிட்டால் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது…” ரமீஸ் ராஜா அதிரடி!

“அது மட்டும் நடக்காவிட்டால் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது…” ரமீஸ் ராஜா அதிரடி!
, சனி, 3 டிசம்பர் 2022 (09:57 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

இது சம்மந்தமாக பிசிசிஐக்கும் , பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகமாகி வரும் நிலையில், ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடக்காமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால், தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்த அடியை என்னால் பார்க்க முடியவில்லை- அக்தர் கவலை!