Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் டாப் 3 பேட்டிங் சரியில்லை என புகார் அளித்தாரா ஹர்திக் பாண்ட்யா?

இந்தியாவின் டாப் 3 பேட்டிங் சரியில்லை என புகார் அளித்தாரா ஹர்திக் பாண்ட்யா?
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:03 IST)
டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “இந்திய அணி டி 20 போட்டிகளில் முதலில் களமிறங்கும் ரோஹித், கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை அதிகமாக்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் நாம் சூர்யகுமார் யாதவ்வையும், ஹர்திக் பாண்ட்யாவையுமே அதிரடிக்காக நம்பிக் கொண்டிருக்க முடியாது” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி “இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐக்கு புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன”. இந்திய டி 20 அணிக்கு எதிர்காலத்தில் முழு நேரக் கேப்டனாக பாண்ட்யா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கால்பந்து.. 4 கோல்கள் போட்டு ஜெர்மனி அசத்தல்