பிரச்சனைகளை சரிசெய்யும் விதத்தில் விளையாடுகிறேன்.. ஆட்டநாயகன் ரஜத் படிதார்!

vinoth
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (11:08 IST)
நேற்று ஐதராபாத்தில் நடந்த பெங்களூ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில்  பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணிக்காக ரஜத் படிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்துக் கலக்கினார். அவரின் இன்னிங்ஸ்தான் ஆர் சி பி அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவர் அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் “ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த திட்டமும் இல்லை. நான் அனைத்து பவுலர்களை அட்டாக் செய்து விளையாடவேண்டுமென்றுதான் விளையாடுகிறேன். நான் வீட்டுக்கு சென்றால் அங்கிருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வேன். அதே போலதான் பேட் செய்ய விரும்புகிறேன்.

எப்போதும் பேட்டிங் இலக்கணத்தோடு விளையாட வேண்டுமென விரும்புகிறேன். என்னால் எந்தந்த விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியுமோ அதை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments