Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையால் போட்டி நிறுத்தம்… இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு!

மழையால் போட்டி நிறுத்தம்… இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு!
, புதன், 2 நவம்பர் 2022 (16:04 IST)
இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் இப்போது போட்டி தடை பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை போட்டி மீண்டும் தொடங்கபடாவிட்டால், இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்படும். ஏனென்றால் பங்களாதேஷ் அணி 5 ஓவர்களுக்கு மேல் விளையாடிவிட்டது.

மேலும் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பங்களாதேஷ் அணி 6 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்து 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி கே எல் ராகுல், கோலி ஆகியோரின் சிறப்பான அரைசதம்  மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷுக்கு இந்தியா ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டும் லிட்டன் தாஸ்… 21 பந்துகளில் அரைசதம்!