Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருக்கும் கொஞ்ச நஞ்ச ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க போவது யார்… டாஸ் வென்ற பஞ்சாப் எடுத்த முடிவு!

இருக்கும் கொஞ்ச நஞ்ச ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க போவது யார்… டாஸ் வென்ற பஞ்சாப் எடுத்த முடிவு!

vinoth

, வியாழன், 9 மே 2024 (19:11 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று நடக்கும் 58 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ப்ளே ஆஃப் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிட்டன. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே அந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும்.

தரம்சாலா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

பெங்களூர் ப்ளேயிங் லெவன்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(w), ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்

பஞ்சாப் ப்ளேயிங் லெவன்
ஜானி பேர்ஸ்டோவ்(W), பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் கர்ரன்(C), லியாம் லிவிங்ஸ்டோன், அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வித்வத் கவேரப்பா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து சீனியர் வீரர்கள் புகார்?... பரபரப்பு தகவல்!