Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய பிருத்வி ஷா!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:52 IST)
திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார்.

இந்நிலையில் நார்தாம்ப்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் சோமர்செட் அணிக்கு எதிரான ஒரு நாள் கோப்பை போட்டியில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக 129 பந்துகளில் இரட்டை சதம் விளாசி, பிருத்வி ஷா புதன்கிழமை தனது திறமையை வெளிப்படுத்தினார்.

28 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 244 ரன்களை எடுத்த ப்ரித்வி ஷாவின் அட்டகாசமான ஆட்டத்தால், நார்த்தாம்டன்ஷயர் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 415 ரன்களை குவித்தது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் நார்தாம்ப்டன்ஷையரின் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் லிஸ்ட் ஏ வரலாற்றில் உலகளவில் ஆறாவது அதிகபட்ச ஸ்கோராகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments