Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த பிரவீன் தாம்பே - 20 லட்சத்துக்கு ஏலம் போன 48 வயது வீரர்

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (14:33 IST)
ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பிரவீன் தாம்பே பெற்றுள்ளார்

2020 ஆம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது அதில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸன் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்தார். இந்த ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த இன்னொரு வீரரும் சாதனை படைத்துள்ளார்.

48 வயதான பிரவீன் தாம்பே எனும் சுழற்பந்துவீச்சாளர் இந்த ஏலத்தில்கலந்து கொண்டார். அவரை யாரும் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்த வேளையில் கொல்கத்தா அணி அவரைஆரம்ப விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிக வயதான வீரர் என்ற பெருமையை பிரவீன் பிரவீன் தாம்பே பெற்றுள்ளார் இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடிய பிரவீன் தாம்பேகடந்த சில சீசன்களில் விளையாடாமல் இருந்தாள் இந்நிலையில் மீண்டும் அவர் கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments