Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூர் அணியில் ஷமார் ஜோசப்பை எடுக்க திட்டம்!

Shamar Joseph

Sinoj

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (19:06 IST)
பெங்களூர் அணியில் ஷமார் ஜோசப்பை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தாண்டுக்காக ஐபிஎல் தொடர் விரைவில் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில், 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் 2024 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும், ஐபிஎல் அட்டவணை எப்போது ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூர் அணியில் ஷமார் ஜோசப்பை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்திய தீவுக்ள் அணி வீரர் ஷமார் ஜோசப்பை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வாங்கலாம் என தகவல் வெளியாகிறது.

2024 ஐபிஎல் தொடரில் இருந்து டாம்கரன்  விலகவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏலத்தில் யாரும் வாங்காத  ஷமார் ஜோப்பை  எடுக்க ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!