Publish Date: Thu, 07 Dec 2023 (07:36 IST)
Updated Date: Thu, 07 Dec 2023 (07:39 IST)
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 39.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹோப் 68 ரன்களும் ரூதர்போர்டு 63 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 203 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. வில் ஜேக்ஸ் அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் சாம் கர்ரன் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததை எடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது