Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கோலிதான் இப்போது எங்களது பிரச்சனை’… ஆஸி வீரர் கருத்து

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி 20 தொடர் நாளை தொடங்க உள்ளது.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பற்றி பேசியுள்ள ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் “கோலிதான் இப்போது எங்களுக்கு இருக்கும் பிரச்சனை. அவர் பார்முக்கு வந்திருப்பது எதிரணிகளுக்கு பிரச்சனைதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments