Publish Date: Sun, 18 Sep 2022 (15:31 IST)
Updated Date: Sun, 18 Sep 2022 (15:35 IST)
இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளராக பணியாற்றியவர் ரவி சாஸ்திரி.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சமீபத்தில் தனது பதவிகாலத்தை நிறைவு செய்தார். இப்போது மீண்டும் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் தான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது என்றும் தான் வெறும் ஒரு வர்ணனையாளர் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரிடம் மீண்டும் “பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “பயிற்சியாளராக என்னுடைய காலம் முடிந்துவிட்டது. இனிமேல் நான் கிரிக்கெட்டை தூரமாக இருந்து ரசிப்பேன்.” எனக் கூறியுள்ளார்.