Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாகின் அப்ரிடியின் மருத்து செலவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை… ஷாகித் அப்ரிடி கருத்து!

ஷாகின் அப்ரிடியின் மருத்து செலவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை… ஷாகித் அப்ரிடி கருத்து!
, திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:57 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின் மருத்து செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷாகீன் அப்ரிடியின் மருத்துவ செலவு மற்றும் பயண செலவு என எதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை என்று ஷாகீன் அப்ரிடியின் உறவினரும், முன்னாள் பாகிஸ்தான் வீரருமான ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். ஷாகித் அப்ரிடியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“10- 12 பந்துகள் விளையாடுபவருக்கு டீமில் என்ன வேலை…” தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்!