Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் அப்படி..? ஐசிசி மேல் பழியைப் போடும் முன்னாள் கேப்டன்!

Advertiesment
பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் அப்படி..? ஐசிசி மேல் பழியைப் போடும் முன்னாள் கேப்டன்!

vinoth

, புதன், 26 பிப்ரவரி 2025 (08:49 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு வல்லுனர்கள் பலக் காரணங்களை சொல்லி வருகின்றனர். அணியில் ஒற்றுமையின்மை, எந்த வீரரும் பொறுப்போடு விளையாடாதது மற்றும் போட்டியின் எந்தக் கட்டத்திலும் போராடும் தன்மையை வெளிக்காட்டாதது என அனைத்துத் துறைகளிலும் அந்த அணி பலவீனமாக உள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அணியின் முனனள் ரமீஸ் ராசா ஐசிசி பாகிஸ்தான் அணிக்கு கொடுத்த அட்டவணை சரியில்லை எனக் குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் “பாகிஸ்தான் அணி தன்னுடைய முதல் போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பாகிஸ்தான் முதலில் வலு குறைவான பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்திய அணியையாவது எதிர்கொண்டிருந்தால் இரு அணிகளுக்குமே சமமான நெருக்கடி இருந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அணியை என்னிடம் கொடுங்கள்… நான் மாற்றிக் காட்டுகிறேன் – யுவ்ராஜ் சிங் தந்தை ஆவேசம்!