Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜடேஜா, அக்ஸர் சுழலில் சிக்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 235 ரன்களுக்கு ஆல் அவுட்!

Advertiesment
ஜடேஜா, அக்ஸர் சுழலில் சிக்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 235 ரன்களுக்கு ஆல் அவுட்!

vinoth

, வெள்ளி, 1 நவம்பர் 2024 (15:23 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் புனேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளை வென்ற நியுசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

முதலில் நிதானமாக ஆடிய நியுசிலாந்து அணி இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலால நிலைகுலைந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கெட்களும், அக்ஸர் படேல் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற நியுசிலாந்து அணி நிதான பேட்டிங்…!