Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன்… நம்பிக்கையோடு உழைக்கும் நட்டு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:44 IST)
இந்திய அணியில் இடம் கிடைத்து சில போட்டிகளில் விளையாடி கவனம் பெற்ற நடராஜன் பின்னர் காயம் காரணமாக உட்கார வைக்கப்பட்டார்.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவருக்கு தமிழக அணியிலும் வாய்ப்பில்லை எனும் சூழல் உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறாத நிலையில் விரைவில் நடக்க உள்ள ரஞ்சி கோப்பைக்கான அணியில் தமிழகத்துக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்குள் மீண்டும் திரும்புவது குறித்து பேசியுள்ள அவர் ‘ஐபிஎல் பற்றி இப்போது அதிகம் யோசிக்கவில்லை. உலகக்கோப்பை தொடரும் வருவதால் மிகப்பெரிய ஆண்டாக இருக்கும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருவதால் பதற்றம் கொஞ்சம் இருக்கதான் செய்கிறது. மக்கள் என்னிடம் வலுவான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

உலகக்கோப்பை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments