Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி! – 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:02 IST)
ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்க உள்ளது. மெல்போர்ன், சிட்னி, ப்ரிஸ்பன் உள்ளிட்ட 7 இடங்களில் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் அக்டோபர் 23 அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை காண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments