இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி! – 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:02 IST)
ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்க உள்ளது. மெல்போர்ன், சிட்னி, ப்ரிஸ்பன் உள்ளிட்ட 7 இடங்களில் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் அக்டோபர் 23 அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை காண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments