Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறிய நடராஜன்!!

தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறிய நடராஜன்!!
, வியாழன், 3 டிசம்பர் 2020 (15:44 IST)
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியின்போது, தமிழக வீரர் நடராஜன் இரண்டு விக்கெட்டிகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் விஜயகாந்த் நடராஜை வாழ்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஒட்டுமொத்த தமிழகமும் நடராஜனின் சாதனையால் பெருமை அடைந்த அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தது.

இந்நிலையில், தனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவுக்காக விளையாடியது வித்தியாசமாக இருந்தது. சவால்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பாக செயல்பட்டும் இந்தியா திரும்பும் பவுலர்! ஏன் தெரியுமா?