Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

vinoth
வியாழன், 3 ஏப்ரல் 2025 (06:30 IST)
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது ஆர் சி பி.

ஆனால் நேற்றைய போட்டியில் அந்த அணியின் ஆட்டம் சுணக்கமாகக் காணப்பட குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதாக வென்றது. முதலில் பேட் செய்த ஆர் சி பி அணியில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி ஆட்டமிழக்க ஒரு கட்டத்த்தில் அந்த அணி 100 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. ஆனால் பின் வரிசையில் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியால் கௌரவமான ஸ்கோராக 169 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18 ஆவது ஓவரில் மிக எளிதாக வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 39 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.  குஜராத் அணி சார்பாக 3 விக்கெட்கள் வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments