Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபிள்ளைத்தனமாக இந்தியா நடந்துகொள்கிறது… கண்டனத்தைத் தெரிவித்த பாகிஸ்தான் பவுலர்!

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:38 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடத்தும் பட்சத்தில் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகும் என தெரிகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பவுலர் முகமது அமீர் இதுகுறித்து பேசும்போது “இது கிரிக்கெட்டுக்குதான் நஷ்டம். இந்தியா வரவில்லை என்றால் மற்ற அணிகளோடு தொடரை நடத்துவதுதான் உத்தமம். ஒரு அணிக்காக அனைத்து அணிகளும் பாதிக்கப்படக் கூடாது. எல்லா அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடத் தயாராக இருக்கும்போது இந்தியா மட்டும் வரமறுப்பது சிறுபிள்ளைத் தனமானது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

இவர்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணமாக இருப்பார்… முன்னாள் வீரர் கணிப்பு!

உங்கள் அணியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்? – கவாஸ்கரை எச்சரித்த இன்சமாம்!

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி தங்க பேட் பெறுவாரா கோலி…?

அடுத்த கட்டுரையில்
Show comments