Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

vinoth
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:49 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாது. அதிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் ஓய்வு பெறவேண்டுமென ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் சொதப்பல்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ரோஹித் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். அதனால் கடைசி போட்டி அவருக்கு மிகவும் முக்கியமானதாகும். கோலியைப் பொறுத்தவரை ஒரே தவறை அவர் திரும்ப திரும்ப செய்து வருகிறார். ஸ்விங் பாலை எதிர்கொள்ளும் போது அவர் கிரீஸுக்கு வெளியே நிற்கிறார். ஆனால் ஸ்விங் பாலை சிறப்பாக ஆடவேண்டும் என்றால் க்ரீஸ் உள்ளே நின்று ஆடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments