Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவு… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!

vinoth
புதன், 12 பிப்ரவரி 2025 (08:22 IST)
இன்னும் ஒரு வாரத்தில் பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் காயம் காரணமாக தற்போது முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விலகி வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் மிட்செல் ஸ்டார்க் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments