Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை அணியின் முக்கிய வீரரைத் தக்க வைத்த நிர்வாகம் !

சென்னை அணியின் முக்கிய வீரரைத் தக்க வைத்த நிர்வாகம் !
, புதன், 20 ஜனவரி 2021 (15:46 IST)
சென்னை கிங்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் பலத்த ஏற்பாடுகளுடம் ஐபிஎல் 14 வது சீசன் நடைபெற்றது. சென்னை அணி தரப்பில் சின்ன தலை சுரேஷ் ரெய்னா தன் மாமா கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியா திரும்பினார். அவருக்கும், நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி சூப்பர் லீக்கில் வெளியேறி அதிர்ச்சி யளித்தது. இதில் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் இல்லாததும் ஒரு காரணம்  எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை அணியில் தக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், சென்னை அணிக்கு தோனியே தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் ஒரே நாளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேதார் ஜாதவ், பியூவ் சாவ்லா, முரளி விஜய்யை நிர்வாகம் கழட்டிவிட்டுள்ளதாகவும்  சுரேஷ் ரெய்னா , தோனி உள்ளிட்ட வீரர்களை தக்க வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாற்று வெற்றியை புகழும் உலக செய்தித்தாள்கள்! – ஐசிசி வெளியிட்ட புகைப்படம்!