Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்காவது டெஸ்ட் போட்டி… காயத்தால் ஆஸி வீரர் விலகல்!

நான்காவது டெஸ்ட் போட்டி… காயத்தால் ஆஸி வீரர் விலகல்!
, வியாழன், 14 ஜனவரி 2021 (10:35 IST)
ஆஸி தொடக்க ஆட்டக்காரர் பூக்கோவ்ஸ்கி நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த தொடரின் போதும் அதிகளவிலான வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பது அணித்தேர்வில் மிகப்பெரிய சவாலாக அமைந்ததுள்ளது. இந்திய வீரர்கள் கே எல் ராகுல், பூம்ரா, விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத சூழலில் உள்ளனர். இதற்கு முன்னரே உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் காயமடைந்தனர். அதே போல அஸ்திரேலிய அணியில் வார்னர், பேட்டின்ஸன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக முழுத்தொடரையும் விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான வில் புகோவ்ஸ்கியும் இப்போது காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பீல்ட் செய்யும் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் விலகியுள்ளார். இதனால் ஆஸி அணிக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு புதிய கொரோனா திரிபு பாதிப்பா?