Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்பி வந்த ‘தல’ தோனி: கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (13:03 IST)
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கும் நிலையில் பயிற்சிக்காக மகேந்திரசிங் தோனி சென்னை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் கடைசியாக கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி அதற்கு பிறகு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு டெஸ்ட் மேட்சுகளுக்கும் பெயர் பட்டியல் வெளியாகும்போது அதில் தோனி பெயர் இருக்காதா என ஏங்கிய ரசிகர்களுக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமே.

கிட்டத்தட்ட தோனி மைதானத்திற்குள் புகுந்து விளையாடி 7 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் மார்ச் முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி செய்ய இருக்கிறார் தோனி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் சார்பாக விளையாடும் தோனி மார்ச் 3 முதல் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

நீண்ட மாதங்கள் கழித்து தோனி பயிற்சியில் ஈடுபட போகும் நிலையில் அதை காண ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். சென்னை வரும் தோனியை ஸ்டேடியத்தில் வரவேற்க பலர் பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments