Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!

டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!
, செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:05 IST)
நியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ”இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. டாஸ் வெல்ல முடியாததே அனைத்திற்கும் ஆரம்பமாக அமைந்து விட்டது. இந்த ஆட்டத்தில் மயங்க் மற்றும் ரஹானே தவிர பேட்டிங்கில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களும் மிகவும் சுமாராகவே ஆடினார்கள். நியூஸிலாந்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது அந்த அணியின் கடைசி 3 வீரர்கள் பெரும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இந்த தோல்விக்காக மக்கள் எங்களை பேசலாம். ஆனால் எப்போது ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. எதிரணியும் வெற்றி பெரும் நோக்கில்தான் விளையாட வருகிறார்கள். வெளியாட்கள் என்ன சொல்வார்கள் என நினைத்து பார்க்க தொடங்கினால் எந்த ஆட்டத்தையும் சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியாது. இந்த தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு வருவோம்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி