Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

vinoth
சனி, 30 மார்ச் 2024 (21:20 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 10 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 11 ஆவது போட்டி லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரரான குயிண்ட்டன் டி காக் அரைசதம் அடித்து 54 ரன்கள் சேர்த்தார். அதையடுத்து அந்த அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

க்ருனாள் பாண்ட்யா கடைசி நேர அதிரடியில் இறங்கி 43 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பாக சாம் கரண் அதிகபட்சமாக மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments