Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

Advertiesment
உலக சாம்பியன்ஸ் லீக்

vinoth

, வியாழன், 31 ஜூலை 2025 (08:13 IST)
சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் கொண்ட லெஜண்ட்ஸ் உலகக் கோப்பைத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியை யுவ்ராஜ் சிங் வழிநடத்துகிறார். இதில் சிறப்பாக  விளையாடிய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட முடியாது என தற்போது இந்தியா லெஜண்ட்ஸ் அணி அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. பஹல்ஹாம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்தியா லெஜண்ட்ஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் நடத்தியது. இதில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்தாக்குதலாக ் இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. இதற்குப் பதில் தாக்குதலாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளை தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவான நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!