Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமே ஃபீல்டிங்ல சோலிய முடிக்கலாம்! – டாஸ் வென்ற பஞ்சாப் வியூகம்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (19:09 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோத உள்ளது.

கொல்கத்தா அணி இதுவரை 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெற கட்டாயமாக இன்று கொல்கத்தா அணி வெற்றிபெறவேண்டிய நிலையில் உள்ளது.

பஞ்சாப் அணி 5 வெற்றி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நல்ல ஃபாமில் உள்ளது. இன்று இந்த அணி அதிரடி காட்டி தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. சமீப கால ஆட்டங்களில் ஆரம்பத்தில் ஆடும் அணியின் ரன்ரேட்டை குறைத்து பின்னர் சேஸிங் செய்த அணிகள் அதிகளவில் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில் கிங்ஸ் லெவனின் இந்த வியூகம் பலிக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments