Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தூர் டி 20 போட்டிக்காக கிளம்பிய விராட் கோலி!

vinoth
சனி, 13 ஜனவரி 2024 (13:40 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி மொஹாலியில் நடந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தொடருக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருந்தும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டி 20 போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் நாளை நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் விளையாடுவதற்காக அவர் மும்பையில் இருந்து இந்தூர் கிளம்பி சென்று அணியுடன் இணைய உள்ளார்.

கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு அவர் டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments