Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஹித் மற்றும் கோலி ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வு கொடுங்கள்… முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

Advertiesment
ரோஹித் மற்றும் கோலி ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வு கொடுங்கள்… முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

vinoth

, வெள்ளி, 5 ஜூலை 2024 (08:13 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித், கபில்தேவ் மற்றும் தோனிக்கு அடுத்து இணைந்துள்ளார். மேலும் இந்த வெற்றியோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். அதே போல இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் ஓய்வை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களின் ஜெர்ஸி எண்களான 45 மற்றும் 18 ஆகியவற்றுக்கும் ஓய்வு கொடுத்து அதை யாருக்கும் தரக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஏற்கனவே சச்சின் மற்றும் தோனி ஆகியோருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் இப்படி ஒரு மாற்றமா?... ட்ரோல் செய்த மும்பை ரசிகர்களே ஹர்திக்கை கொண்டாடிய மொமண்ட்!