Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலி, ஜடேஜா, பண்ட் ரி எண்ட்ரி… இரண்டாவது டி 20 போட்டியில் யார் யார் நீக்கம்?

கோலி, ஜடேஜா, பண்ட் ரி எண்ட்ரி… இரண்டாவது டி 20 போட்டியில் யார் யார் நீக்கம்?
, சனி, 9 ஜூலை 2022 (09:16 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி இன்று பர்ஹிங்ஹாமில் நடக்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கோலி, பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடவில்லை.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் அவர்கள் மூவரும் அணிக்குள் திரும்புகிறார்கள். இதனால் முந்தைய போட்டியில் விளையாடிய வீரர்கள் யார் யார் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலியின் இடத்தில் விளையாடிய தீபக் ஹூடா, அக்ஸர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் இடங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சொலல்ப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடால் வெளியேற்றம்....கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!