Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

vinoth
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (07:34 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரில் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் அடித்த ஒரு சதத்தைத் தவிர மற்ற இன்னிங்ஸ்களில் அவர் சோபிக்கவில்லை. அதிலும் ஒரே மாதிரியாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் எட்ஜ் ஆகி அவுட் ஆகி வருகிறார்.

இது சம்மந்தமாக பல முன்னணி வீரர்கள் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரரான சைமன் காடிச் “கிங் (கோலி) இறந்துவிட்டார். புதிய கிங் (பும்ரா) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார். இந்த தொடரில் 30 விக்கெட்கள் வீழ்த்தி பும்ரா அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments