Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரையிறுதி சவாலுக்கு தயாராக உள்ளோம்… கேன் வில்லியம்சன் கருத்து!

Advertiesment
அரையிறுதி சவாலுக்கு தயாராக உள்ளோம்… கேன் வில்லியம்சன் கருத்து!
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:18 IST)
நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் வலிமையாக உள்ளது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏதேனும் அதிசயம் நடந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாத பட்சத்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் முதல் அரையிறுதியில் மோதும்.

அரையிறுதிப் போட்டி பற்றி பேசியுள்ள நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் “எங்கள் அணியினர் பவுலிங் மற்றும் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மழை வருமென்று எதிர்பார்த்து அதற்கேற்றார் போல விளையாடினோம். ஆனால் மழை வரவில்லை. லீக் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமைந்தால் அரையிறுதியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை ஒரு அணியால் மட்டுமே வீழ்த்த முடியும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் கருத்து!